முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த மேலும் இருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் தொடர்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படையினரில் ஏற்கனவே இருபது பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது இன்றும் இருவர் குறித்த தகவல் வெளியாகிய நிலையில்,
அங்கு தொற்றுக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு, முள்ளியவளை